மதுரை: கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்

71பார்த்தது
மதுரை: கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கல்லூரி மாணவி நேற்று (செப்.16) மாயமானதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வைத்தியநாதபுரம் சேர்ந்த வீரன் என்பவரின் 17 வயது மகள் வாடிப்பட்டியில் உள்ள தாய் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி. ஏ படித்து வருகிறார். இவர் நேற்று (செப்.16) கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. எனவே அவரது தந்தை நேற்று (செப்16) மாலை சோழவந்தான் காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என்று புகார் செய்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி