அண்ணாமலை பொய்தான் பேசுவார். அமைச்சர் பேட்டி.

52பார்த்தது
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

தளபதியாரின் மூன்றாண்டு கால ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம். தமிழக முதல்வர் மூன்றாண்டு கால கொடுத்த ஆட்சிக்கு கிடைத்த வெற்றி இது.

நாம் தமிழர் கட்சி நிறைய தொகுதிகளில் டெபாசிட் இழந்தது குறித்த கேள்விக்கு:

அந்தக் கட்சியின் அமைப்பு அப்படி அதை கட்சியாக நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

பாஜக வளர்ந்துள்ளதா என்ற கேள்விக்கு:

வாயை திறந்தால் அண்ணாமலை பொய்தான் பேசுவார். எந்த காலத்திலும் திராவிட ஆட்சி தான் நடைபெறும் என உயர் கல்வி துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறினார்.

தொடர்புடைய செய்தி