“முரசொலியின் குரல் பாசிசத்திற்கு எதிராக ஒலிக்கட்டும்” - உதயநிதி

77பார்த்தது
“முரசொலியின் குரல் பாசிசத்திற்கு எதிராக ஒலிக்கட்டும்” - உதயநிதி
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் 40க்கு 40 இடங்களில் திமுக அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், தஞ்சாவூர் தொகுதியில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்ற ச.முரசொலியை இன்று(ஜூன் 13) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். மேலும், “கலைஞரின் முரசொலியை போல, தஞ்சாவூர் எம்.பி.யான முரசொலியின் குரலும் பாசிசத்திற்கு எதிராக ஓங்கி ஒலிக்கட்டும்” என உதயநிதி தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி