கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் மாவட்ட அறங்காவல் குழு தலைவரும் ஒன்றிய செயலாளருமான ரஜினி செல்வம் முன்னிலையில் மாவட்ட பொருளாளர் கதிரவன் தலைமையில் கல்லாவி பேருந்து நிலையம் மற்றும் நொச்சிப்பட்டி கிராமத்திலும் மத்திய அரசு கண்டித்து பதாகைகள் ஏந்தியவாறு
வழங்கிடு வழங்கிடு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை வழங்கிடு என மத்திய அரசை கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் கணேசன், ஊத்தங்கரை நகர செயலாளர் தீபக் என்கிற பார்த்திபன், மாவட்ட பிரதிநிதி குணசேகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மணிவண்ணன், கிளைச் செயலாளர் பழனி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடராஜ், காந்தி, ஆறுமுகம், தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்
சதீஷ் உள்ளிட்ட
ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கண்டன கோசங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.