விவசாயிகளுக்கு விதைகள், நிலக்கடலை விற்பனை துவக்கம்

53பார்த்தது
விவசாயிகளுக்கு விதைகள், நிலக்கடலை விற்பனை துவக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வேளாண்மை துறை சார்பில் ஒசூர் - ராயக்கோட்டை சாலையில் உள்ள வேளாண்மை அலுவலத்தில் விவசாயிகளுக்கு விதைகள், நிலக்கடலை விற்பனையை மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ், MLA, மாநகர செயலாளரும் மேயருமான எஸ். ஏ. சத்யா, Ex. MLA துவக்கி வைத்தனர்.

உடன் பகுதி செயலாளர்கள் ராமு, வெங்கடேஷ், மாமன்ற உறுப்பினர் சென்னீரப்பா, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சக்திவேல், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் இக்ரம்அகமத், மாநகர துணை அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி சீனிவாஷ், வார்டு செயலாளர்கள் நாகராஜ், சிவா, மகேஷ்பாபு அரசு அதிகாரிகள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி