கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 30% பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக பனாரஸ் பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை வெளியிட்டிருந்தது. இதனை, உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என ஐசிஎம்ஆர் வலியுறுத்தியுள்ளது. இந்த ஆய்வு அவறிக்கையில் உண்மைத் தன்மை இல்லை என்றும் சரியான தரவுகளும் வழங்கவில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. ஆகையால், இதனை திரும்பப் பெற வேண்டும் எனவும் இல்லையெனில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.