தோகைமலையில் விசிக சார்பில் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

54பார்த்தது
கரூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தோகைமலை மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தோகைமலையில் நேற்று நடைபெற்றது. தோகைமலை ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் பாலகுமார் முன்னிலை வகித்தார். மாவட்டத் துணை அமைப்பாளர் ராமன், ஒன்றிய பொருளாளர் மகாதேவன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் பிரபுகுமார், மலைவேல், ஒன்றிய துணை அமைப்பாளர் சரத்குமார் ராஜலிங்கம், ரமேஷ்குமார், வேணு, வினித், பால்ராஜ், முருகேசன் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர். 

இக்கூட்டத்தில் தோகைமலை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட 10 ஊராட்சிகளிலும் முகாம் செயற்குழுக் கூட்டங்கள் நடத்தியதற்கு வருகின்ற 13ஆம் தேதி நன்றித் தெரிவித்தல் கூட்டம் நடத்துதல், புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் 134வது பிறந்த நாளில் அனைத்துப் பகுதிகளிலும் மலர் தூவி மரியாதை செலுத்துதல், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடுதல், விசிக தேர்தல் அங்கீகாரம் பெற்று பானைச் சின்னத்தை வென்றெடுத்ததை வருகின்ற மே மாதத்தில் தோகைமலையில் அரசியல் அங்கீகார வெற்றிவிழா பொதுக்கூட்டம் மேல்நிலைப் பொறுப்பாளர்கள் வழிகாட்டுதலோடு கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷாநவாஸ் சிறப்பு அழைப்பாளராக அழைத்து பொதுக்கூட்டம் நடத்துவது என 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி