தகை சார் பள்ளி கட்டிடம், எம்எல்ஏ பங்கேற்பு

70பார்த்தது
தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் 28 மாவட்டங்களில் தகைசால் பள்ளிகளின் புனரமைக்க பட்ட கட்டடங்களையும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்
அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தகைசால் பள்ளியில் புனரமைக்கப்பட்ட கட்டிடங்களை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் தலைமை ஏற்று குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நகர்மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா, தகைசால் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரேவதி பாஸ்கர், நகர்மன்ற உறுப்பினர்கள் மஞ்சு கணேஷ், சையது உசேன், முன்னாள் கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணி, ஜாபருல்லா, ஆனந்தகுமார், நகரத் துணைச் செயலாளர் செந்தில்குமார், நகர பொருளாளர் தமிழரசன், பொறியாளர் அணி கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி