விற்பனைக்கு கொண்டு வந்த 9 கிலோ புகையிலை பறிமுதல்

71பார்த்தது
விற்பனைக்கு கொண்டு வந்த 9 கிலோ புகையிலை பறிமுதல்
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா குரும்பபட்டி நிழற்குடை அருகே உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வைத்திருந்தது தெரியவந்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற பாலவிடுதி போலீசார் பைக்கில் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்த திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சரவணகுமார் என்பவர் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 9 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி