கள்ள லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது

80பார்த்தது
கள்ள லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா பொய்கைபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் தங்கராஜ் (65). இவர் தனது வீட்டின் பின்புறம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் லாட்டரி சீட்டு விற்ற தங்கராஜ் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ஐந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி