அனுமதி இன்றி சாலை மறியல்- பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்கு.

61பார்த்தது
அனுமதி இன்றி சாலை மறியல்- பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்கு.

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் காவல் நிலையம் முன்பு, அனுமதி இன்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்ட கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.

கரூர் மாவட்ட பாஜக பட்டியல் அணி செயலாளர் ரவிச்சந்திரனை கைது செய்ததை கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபடும் போது, அவர்கள் முறையாக அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த போராட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வராஜ் மற்றும் பாஜக கட்சியின் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


இதனால் சின்ன தாராபுரம் கிராம நிர்வாக அலுவலர் அகிலா அளித்த புகாரில், பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சின்ன தாராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி