மேலப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.
கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, மரகதபுரி பகுதியைச் சேர்ந்தவர் செல்லக்கண்ணு வயது 70-.
இவர் ஏப்ரல் 3-ம் தேதி மாலை 7 மணி அளவில் மேலப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத ஒரு டூ வீலர் நடந்து சென்ற செல்லக்கண்ணு மீது மோதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இச்சம்பவம் அறிந்த செல்லக்கண்ணுவின் மகள் விசாலாட்சி வயது 45 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த டூவீலர் எது? அதை ஓட்டிய நபர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்
க. பரமத்தி காவல்துறையினர்.