நாவல் நகர் அருகே நடந்து சென்ற வடமாநில வாலிபர் மீது டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். மேற்குவங்க மாநிலம், கதிகாரா பகுதியைச் சேர்ந்தவர் சதிபாலா சர்தார் மகன் சாந்தி சர்தார் வயது 43. இவர் கரூர் - சேலம் சாலையில் உள்ள நாவல் நகர் பகுதியில் மார்ச் 16ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கர்நாடக மாநிலம், பெங்களூர், சஞ்சய் நகர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் மகன் ராகுல் என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூவீலர், நடந்து சென்ற சாந்தி சர்தார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். இச்சம்பவம் அறிந்த சாந்தி சர்தாரின் உறவினர் டெப்தாஸ் சர்தார் வயது 28 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ராகுல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.