நடந்து சென்ற இளைஞர் மீது லாரி மோதி விபத்து. இளைஞர் படுகாயம்.

78பார்த்தது
தென்னிலை அருகே நடந்து சென்ற இளைஞர் மீது லாரி மோதி விபத்து. இளைஞர் படுகாயம்.

அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் அருகே உள்ள இடையார் கிராமம், காலனி தெருவை சேர்ந்தவர் வீராசாமி மகன் ராகுல் வயது 20.


இவர் ஜூலை 7ஆம் தேதி அதிகாலை 3: 45 மணியளவில், கரூர்- கோவை சாலையில் தென்னிலை MDS பேக்கரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர், VTK காலனி, தெற்கு ரத தெருவை சேர்ந்த சேகர் வயது 60 என்பவர், வேகமாக ஓட்டி வந்த லாரி, நடந்து சென்ற ராகுல் மீது மோதி விபத்து ஏற்பட்டது.


இந்த விபத்தில் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்த ராகுலை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த ராகுலின் தாயார் சுதா வயது 40 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், லாரியை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சேகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி