
நித்திரவிளை: மனைவியை வெட்டிக் கொன்ற கணவருக்கு ஆயுள்
நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் மனைவி சௌமியா. ராஜேஷ் வேலைக்குப் போகாமல் மனைவியை அடித்து துன்புறுத்தி, மனைவியின் தாலி சங்கிலி உள்பட நகைகளை அபகரித்து, விற்றுள்ளார். மேலும் அதிக வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்தார். இந்த நிலையில் கணவன் மனைவிக்குச் சண்டை ஏற்பட்டது. இந்தத் தகராறில் கடந்த 2015 ஆம் ஆண்டு மனைவியின் கழுத்தை அறுத்து கொன்றார். இது தொடர்பாக நித்திரவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜேஷை கைது செய்தனர். இந்த வழக்கு குழித்துறை மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரய்யா 10 ஆண்டுகளுக்குப் பின்பு இன்று ராஜேஷுக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.