அழகியமண்டபம் அருகே சென்டர் மீடியினில் மோதிய டாரஸ் லாரி

9537பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிவேகமாக சீறிப்பாயும் டாரஸ் லாரிகளால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. அதுபோல் சாலையின் நடுவே விபத்துக்களை குறைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன்களிலும் வாகனங்கள் மோதுவது மோதுவதும், தொடர் விபத்துக்கள் ஏற்படுவதும் தற்போது குமரி மாவட்டத்தில் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் மார்த்தாண்டத்தில் இருந்து தக்கலை நோக்கி அதி வேகமாக சென்று கொண்டிருந்த காலியான டாரஸ் லாரி ஒன்று அழகிய மண்டபம் அருகே கல்லு விளை பகுதியில் செண்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது.

டிரைவர் உடனே அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் சம்பவ இடம் விரைந்து லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி