முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், பாலியல் புகாரில் சிக்கிய எம்பி-யுமான பிரஜ்வால் ரேவண்ணாவை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். வெளிநாடு தப்பிச்சென்ற பிரஜ்வலின் பாஸ்போர்ட்டை உடனடியாக முடக்கி, சர்வதேச போலீஸ் உதவியுடன் அவரை இந்தியா வரவழைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு இந்திய வெளியுறவுத்துறை மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரிக்கை வைத்துள்ளார்.