கீழ்குளத்தில்அரசு தொடக்கப் பள்ளி கட்டிடம் திறப்பு விழா

83பார்த்தது
கீழ்குளத்தில்அரசு தொடக்கப் பள்ளி கட்டிடம் திறப்பு விழா
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை குழந்தைகள் நேய பள்ளி உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கிள்ளியூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்குளம் வலிய விளை அரசு தொடக்கப் பள்ளியில் ரூபாய் 63. 67 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியானது கீழ்குளம் வலிய விளை தொடக்கப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சரளா கோபால் குத்து விளக்கு ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், பேரூராட்சி துணைத் தலைவர் விஜயகுமார், தொடக்கப் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் தாம்சன், கிள்ளியூர் வட்டார கல்வி அலுவலர் கலாவதி மற்றும் மற்றும் கிள்ளியூர் திமுக ஒன்றிய செயலாளர் பி கோபால், வார்டு உறுப்பினர் ஷோபா, பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி