சகோதரிகளிடம்  தகராறு: தட்டி கேட்ட சகோதரனை தாக்கிய கும்பல்

81பார்த்தது
சகோதரிகளிடம்  தகராறு: தட்டி கேட்ட சகோதரனை தாக்கிய கும்பல்
நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம், கோவில்விளை பகுதியை  சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (52).   இவரது சித்தியின்  மகள்கள்  வல்சலா குமாரி மற்றும் லதா குமாரி ஆகிய இருவரும் கிறிஸ்டோபர் வீட்டின் அருகே வசித்து வருகின்றனர்.

சம்பவத்தன்று மதியம் காஞ்சாம்புறம் பகுதியை சேர்ந்த அகன்ஷா (24) கிரிஜா (56) அதங்கோடு பகுதியை சேர்ந்த ஜெயன் (55) மற்றும் சந்திரா, விஜி, சரோஜா ஆகியோர் சேர்ந்து வல்சலாகுமாரி மற்றும் லதா குமாரி ஆகியோரை  சொத்து சம்பந்தமான பிரச்சினை தொடர்பாக  தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கிறிஸ்டோபர் சென்று கும்பலிடம் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த ஆறு பேர் கும்பல் கிறிஸ்டோபர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.

இதில் பலத்த காயமடைந்த கிறிஸ்டோபர் நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமான புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி