“உயிரிழப்புகளுக்கு அரசின் கவனக்குறைவே காரணம்”

84பார்த்தது
“உயிரிழப்புகளுக்கு அரசின் கவனக்குறைவே காரணம்”
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கூறுகையில், “அரசின் கவனக்குறைவால், வான் படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல் வேதனை நிகழ்வாக மாறிவிட்டது. அரசு இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற நிகழ்வுகளில் விழிப்புடன் இருக்க வேண்டும். தன்நலன் பேணாது தன்மக்கள் நலனையே பெரிதாக பேணும் அரசுதான் மக்களுக்கான அரசாக விளங்கும்” என்றார்.

தொடர்புடைய செய்தி