கனகமூலம் சந்தை வியாபாரிகள் தேர்தல் புறக்கணிப்பு.

613பார்த்தது
கனகமூலம் சந்தை வியாபாரிகள் தேர்தல் புறக்கணிப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள மன்னர்கள் கால பாரம்பரியமிக்க 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கனகமூலம் காய்கறி சந்தையை இடித்து, வணிக வளாகம் கட்ட நினைக்கும் அரசை கண்டித்து வியாபாரிகள் சங்கத்தினர் இன்று தேர்தல் புறக்கணிப்பு பேனர்கள் வைத்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் வியாபாரிகள் அவர்கள் குடும்பத்தினர் 10 ஆயிரம்பேர் வாக்களிக்க மாட்டார்கள் என அனைத்து வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டனர்.

தொடர்புடைய செய்தி