முன்னாள் எம்.பி. கணேசமூர்த்திக்கு நினைவேந்தல் கூட்டம்

81பார்த்தது
முன்னாள் எம்.பி. கணேசமூர்த்திக்கு நினைவேந்தல் கூட்டம்
சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் மறைந்த ஈரோடு மதிமுக எம்.பி. அ.கணேசமூர்த்தி நினைவேந்தல் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி தலைமையில் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் எம்எல்ஏ பேசியதாவது: முன்பு அரசியலில் இருந்தவர்கள், அரசியலில் இல்லாதவர்களும் சமூக நீதிக்காகவும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனவும் நினைத்து செயல்பட்டனர். அதுபோன்ற பழைய அரசியல் நிலைப்பாட்டாளர்களில் ஒருவராக கணேசமூா்த்தி விளங்கினார்.

திராவிட இயக்கத்தில் இருந்து அரசியல் கட்சியாக யாரும் பிரிந்து செல்லவில்லை. ஒரு குடும்ப நிலைப்பாட்டுடன் பிரிந்தனர். ஆனாலும், கொள்கைகளை சுமந்தபடியே சென்றனர். மறைந்த கணேசமூர்த்தி தான் ஏற்ற ஜனநாயக கொள்கையை இறுதி வரை கடைப்பிடித்தார் என்றார்.

தொடர்புடைய செய்தி