உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்க முடியாது: ஆம் ஆத்மி அமைச்சர்

79பார்த்தது
உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்க முடியாது: ஆம் ஆத்மி அமைச்சர்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியை ஒடுக்க மதுக் கொள்கை விவகாரத்தை மிகப்பெரிய அரசியல் சதியாக பயன்படுத்தி வருகிறார்கள் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி அமைச்சருமான சவுரவ் பரத்வாஜ் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், உச்சநீதிமன்றம் செல்வோம் என்றும் தெரிவித்தார். மதுபானக் கொள்கை வழக்குகளை விசாரிக்கும் இ.டி., சி.பி.ஐ., இதுவரை ஒரு ரூபாய் கூட முறைகேடான பணத்தை மீட்கவில்லை. இந்த வழக்கு அரசியல் சதிக்காக புனையப்பட்டது என கூறினார்.

தொடர்புடைய செய்தி