பனை மரங்களை பிடுங்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

66பார்த்தது
திருக்கழுக்குன்றம் அருகே தனிநபரின் வீட்டு மனை பிரிவிற்கு சாலை போட அனுமதி பெறாமல் 5 க்கும் மேற்பட்ட பனை மரங்களை வேறோடு பிடுங்கி எடுத்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வீட்டு மனை உரிமையாளர் இருவர் மீதும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க ஊர் மக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய அம்மனம்பாக்கம் கிராமத்தில் பொதுமக்கள் நடந்து செல்லும் மண் சாலையை சீரமைத்து தார் சாலை போடாமல் அருகே உள்ள தனிநபரின் வீட்டுமனை பிரிவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் விஜயா அப்பகுதியைச் சேர்ந்த வீட்டுமனை உரிமையாளர் சுமதி என இருவரும் சேர்ந்து வீட்டுமனை பிரிவிற்கு சாலை அமைக்க இடையூறாக இருந்ததாக கூறி 5 க்கும் மேற்பட்ட பனை மரங்களை வேரோடு சாய்த்து அப்புறப்படுத்தியுள்ளனர் மற்ற மரங்களை காட்டிலும் பனை மரத்தை எடுப்பதற்கு முறையான அனுமதி பெற வேண்டும் என்பது மரபு ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் விஜயா மற்றும் வீட்டு மனை உரிமையாளர் சுமதி ஆகியோர் முறையாக கிராம நிர்வாக அலுவலரிடம் கூட அனுமதி பெறாமல் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் பனை மரத்தை வேறோடு பிடுங்கி அப்புறப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி