ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது

63பார்த்தது
ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது
நெடுந்தீவு கடல்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 16 ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை 2 படகுகளுடன் சிறைபிடித்து வைத்துள்ளனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 16 மீனவர்களும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் நாளை (அக்.24) ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து, மீனவர்கள் கைது நடவடிக்கையை எதிர்த்து மீனவ மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி