திருப்போரூரில் பெண்களுக்கான சைக்கிள் போட்டி துவக்கம்

76பார்த்தது
கேலோ இந்தியா அமைப்பின் தென் மண்டல பிரிவின் சார்பில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், அந்தமான் ஆகிய ஆறு மாநிலங்களுக்கு இடையேயான பெண்களுக்கான சைக்கிள் போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்றது, இதில் 14 வயது முதல் 16 வயது வரை ஒரு போட்டியும், 16 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு மற்றொரு போட்டியும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு போட்டி என மூன்று பிரிவாக போட்டி நடைபெற்றது.

போட்டியின் முதல் நாளான 20 கிலோ மீட்டர் தூரம் என மூன்று பிரிவாக நடத்தப்பட்டது இந்த போட்டிகளில் 6 மாநிலங்களைச் சேர்ந்த 120 பெண்கள் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்றவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு அதில் குறுகிய நேரத்தில் முதலில் வந்த மாணவிகளுக்கு முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசு 6 ஆயிரம், மூன்றாம் பரிசு 4 ஆயிரம் வழங்கப்பட்டது, சீனியர்களுக்கான போட்டியில் முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு தமிழகமும் மூன்றாம் பரிசு கர்நாடகா மாநிலமும் தட்டிச் சென்றது, ஜூனியருக்கான போட்டியில் கர்நாடக மாநிலம் முதல் இரண்டு இடங்களையும் தமிழ்நாடு மூன்றாம் இடத்தையும் பிடித்தது.

தொடர்புடைய செய்தி