புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா நிகழ்ச்சி

68பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட ஆயப்பாக்கம் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இதில் நியாய விலை கடை வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் கூறி வந்த நிலையில் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து புதிய நியாய விலை கடை அமைக்கப்பட்டது அதன் திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் ஆர்த்தி பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக செய்யூர் எம் எல் ஏ பனையூர் பாபு கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் திமுக திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய செயலாளர் எடையாத்தூர் சரவணன், ஒன்றிய துணை செயலாளர் பாஸ்கர், மாவட்ட கவுன்சிலர் கலாவதி நாகமுத்து, ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி ஐயப்பன், விசிக மாவட்ட பொறுப்பாளர் தயாளன், ஒன்றிய செயலாளர் மணவாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி