ஸ்ரீ மகாளீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழா

63பார்த்தது
அருள்மிகு ஸ்ரீ மரகதவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ மகாளீஸ்வரர் ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பழையனூர் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மரகதவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ மகாளீஸ்வரர் ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவை ஒட்டி கடந்த வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜை தனபூஜை கோ பூஜை மகா கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜாளுடன் முதல் கால ஏக சாலை பூஜைகளுடன் மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது இதனைத் தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜை பூர்ணாவதி உள்ளிட்ட பூஜைகளுடன் மகா தீபாராதனை தொடர்ந்து.
யாகசாலையில் இருந்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீரானது விமான கோபுர கலசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி