மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்பு வாரிய மசோதா

61பார்த்தது
வக்பு சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. நேற்று மக்களவையில் நிறைவேறிய நிலையில் இன்று (ஏப்ரல் 04) மாநிலங்களவையிலும் நிறைவேறியது. 128 பேர் ஆதரவு அளித்த நிலையில், 95 பேர் எதிர்த்து வாக்களித்தனர். மசோதா மீது இன்று நள்ளிரவு வரை 2 மணி வரை விவாதம் நடந்தது. வக்பு வாரிய சொத்துக்களை மத்திய அரசு அபகரிக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பின. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும், எதிராக 232 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். 

நன்றி: SansadTV

தொடர்புடைய செய்தி