கள்ளக்குறிச்சி: மழையால் 5 வீடுகள் சேதம்

58பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால், 5 வீடுகள் சேதமடைந்துள்ளது. ஒரு பசுங்கன்று இறந்தது..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புயல் காரணமாக நேற்று முன்தினம் சராசரியாக 32. 03 மி. மீ. , மழை பெய்துள்ளது. இதில் கள்ளக்குறிச்சி தாலுகா நல்லாத்துார் ஆறுமுகம் மகன் பாவாடை என்பவரின் கூரைவீடு, கூத்தக்குடி மகடால் மனைவி குள்ளம்மாளின் தொகுப்பு வீடு, உளுந்துார்பேட்டை தாலுகா மூலசமுத்திரம் பொன்னுசாமி மகன் வீரமணியின் தொகுப்பு வீடு, எ. சாத்தனுார் ஆறுமுகம் மகன் பாவாடை என்பவரின் ஓட்டு வீடு, கல்வராயன்மலை தாலுகா மேல்பாச்சேரி மதுராபுதுார் பெருமாள் மனைவி வெள்ளியம்மாளின் அட்டை வீடு என மொத்தம் 5 வீடுகள் சேதமடைந்துள்ளன.


மேலும் திருக்கோவிலுார் தாலுகா குலதீபமங்கலம் புதுகாலனி சீனுவாசன் மகன் சுபாஷ் என்பவரின் பசுங்கன்று ஒன்று இறந்து போனது என மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி