ரிஷிவந்தியம் - Rishivandiyam

அரசு பஸ் மோதி முதியவர் பலி

சின்னசேலம்: கீழ்க்குப்பம் அருகே அரசு பஸ் மோதி முதியவர் இறந்தார். சின்னசேலம் அடுத்த செம்பாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சோலைமுத்து மகன் செல்லமுத்து, 78; நீரழிவு நோயால் பாதித்த இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வலது கணுக்கால் அகற்றப்பட்டது. நேற்று முன்தினம் இரவு செல்லமுத்து வி. கூட்ரோடு - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையோரம் 2 கைகளை ஊன்றியபடி சென்றார். டோல்கேட் அருகே சேலத்திலிருந்து சிதம்பரம் சென்ற அரசு பஸ் செல்லமுத்து மீது மோதியது. படுகாயமடைந்த அவர் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று காலை இறந்தார். கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


கள்ளக்குறிச்சி
Oct 05, 2024, 03:10 IST/ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம்

அரசு பஸ் மோதி முதியவர் பலி

Oct 05, 2024, 03:10 IST
சின்னசேலம்: கீழ்க்குப்பம் அருகே அரசு பஸ் மோதி முதியவர் இறந்தார். சின்னசேலம் அடுத்த செம்பாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சோலைமுத்து மகன் செல்லமுத்து, 78; நீரழிவு நோயால் பாதித்த இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வலது கணுக்கால் அகற்றப்பட்டது. நேற்று முன்தினம் இரவு செல்லமுத்து வி. கூட்ரோடு - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையோரம் 2 கைகளை ஊன்றியபடி சென்றார். டோல்கேட் அருகே சேலத்திலிருந்து சிதம்பரம் சென்ற அரசு பஸ் செல்லமுத்து மீது மோதியது. படுகாயமடைந்த அவர் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று காலை இறந்தார். கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.