கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி நந்திக்கு, அபிஷேக ஆராதனைகள் நடத்தி, திருமுறை பாடல்கள் பாடி வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதேபோல, கமலா நேரு தெரு-நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், ஏமப்பேர் காசி விஸ்வநாதர், சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர், சோமண்டார்குடி சோம நாதீஸ்வரர், முடியனுார்- தென்கீரனுார் அருணாசலேஸ்வரர், வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர், தண்டலை சுயம்பு நாதேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதேஸ்வரர், கரடிசித்துார் விருத்தகிரீஸ்வரர், அரியபெருமானுார் ஆத்மஞான லிங்கேஸ்வரர், ஆலத்துார் திருவாலீஸ்வரர், பல்லகச்சேரி ராமநாதீஸ்வரர் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.
சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம், நந்திக்கு ஆராதனை நடைபெற்றது. இதேபோல் ராயர்பாளையம் குமாரதேவர் மடம், பழமலைநாதர், தென்பொன்பரப்பி-கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் மற்றும் பஞ்சாட்சரநாதர் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.