பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு பாஜகவினர் நிவாரண உதவி

60பார்த்தது
கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த பலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி பலர் இறந்தனர். இதையடுத்து உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு பா. ஜ. , சார்பில் 1 லட்சம் ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இதையடுத்து, பா. ஜ. , மாநில துணைத் தலைவர் சம்பத், கருணாபுரம் பகுதியில் நிவாரண உதவித் தொகைக்கான காசோலையை வழங்கினார். முதல் கட்டமாக 29 பேருக்கு நிவாரண உதவித்தொகை நேற்று வழங்கப்பட்டது. பா. ஜ. , மாநிலச் செயலாளர் சூர்யா, மாவட்ட தலைவர் அருள், மாநில பொருளாளர் ஸ்ரீசந்த், மாநில பொதுச் செயலாளர் ராஜேஷ், மாவட்ட செயலாளர்கள் ஹரி, கிருஷ்ணமூர்த்தி, ஓ. பி. சி. , அணி மாநில செயலாளர் செல்வநாயகம், பொதுச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட துணைத் தலைவர்கள் சங்கர சுப்ரமணி, சர்தார்சிங் உட்பட பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி