ஐபிஎல் டிக்கெட் விற்பனை - 8 பேர் கைது

67பார்த்தது
ஐபிஎல் டிக்கெட் விற்பனை - 8 பேர் கைது
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று (மே 26) ஐபிஎல் 2024 சீசனின் இறுதிப் போட்டி நடைபெற்றது. அப்போது, கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு ஐபிஎல் டிக்கெட்டை விற்பனை செய்த 8 பேரை கைது செய்தனர். மேலும், இரு டிக்கெட்டின் விலை மூன்று மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி