அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவி

584பார்த்தது
அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவி
தெலுங்கானாவின் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் யாதகரிபள்ளே கிராமத்தில் வசித்து வரும் தம்பதி கோடீசுவர ராவ் மற்றும் பாலாமணி. இவர்களுடைய மகள் குந்திப்பள்ளி சவுமியா (வயது 25). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்கு படிப்பை தொடர சென்றுள்ளார். இதனையடுத்து படிப்பை முடித்து வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 26-ந்தேதி மளிகை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வீடு திரும்பியபோது கார் ஒன்று மோதி அவர் பலத்த காயமடைந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடலை இந்தியா கொண்டுவர அரசிடம் அவரது பெற்றோர் உதவி கேட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி