கோவிலூரில் பாஸ்க்கு பெருவிழா ஆடம்பர தேர் பவனி

63பார்த்தது
கோவிலூரில் பாஸ்க்கு பெருவிழா ஆடம்பர தேர் பவனி
தர்மபுரி: நல்லம்பள்ளி வட்டம் கோவிலூரில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு பாஸ்கு பெருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை இரவு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று விடியற்காலை 3 மணி அளவில் ஆடம்பர தேர் பவனி வானவேடிக்கைகள், மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக ஊரை சுற்றி வளம் வந்தது. காலை 6 மணிக்கு தேர் நிலை நிறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி