விஷச்சாராயம் குடித்த 90 பேரின் உடல் நிலையில் முன்னேற்றம்..!

61பார்த்தது
விஷச்சாராயம் குடித்த 90 பேரின் உடல் நிலையில் முன்னேற்றம்..!
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்த விவகாரத்தில் இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் மட்டும் சுமார் 156 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 90 பேரில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை எட்டு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் சிலர் சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி