நாளைய நாட்டுக்கு நாயகர்கள்: கமலஹாசன் வாழ்த்து!

64பார்த்தது
நாளைய நாட்டுக்கு நாயகர்கள்: கமலஹாசன் வாழ்த்து!
நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமலஹாசன் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களில் 95% வென்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களே, மேற்கல்வி வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன உங்கள் முன். அதிலும் கரைதேர்ந்து வாருங்கள். நாளைய நாட்டுக்கு நாயகர்கள் ஆகலாம். வெற்றி பெறாத மாணவர்களே, இதை நீங்கள் தோல்வியாகக் கருதத் தேவையில்லை. உங்களுக்கான வெற்றிகள் அடுத்தடுத்துக் காத்திருக்கின்றன. உங்களுக்கு என் வாழ்த்துகள்‌ என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி