கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “தூத்துக்குடியில் இடி, மின்னல் தாக்கியதில் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15 கால்நடைகள் இறந்துள்ளன. அதோடு 7 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மே 15ஆம் தேதி அறிவுறுத்தப்பட்டது. 8 மாவட்டங்களில் உள்ள சுமார் 2 கோடி செல்போன்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.