கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

17291பார்த்தது
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி
காதலனின் மீதான மோகத்தால் கணவனை மனைவி கொடூரமாகக் கொன்ற சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. மதுராநகர் ஷிகாரா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் விஜய்குமார் (40), ஸ்ரீலட்சுமி (33). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால், தனது கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறாக இருப்பதாக நினைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் ஸ்ரீலட்சுமி.

காதலன் ராஜேஷ் (30), ரவுடி ஷீட்டர் ராஜேஷ்வர் ரெட்டி (40) ஆகியோருடன் சேர்ந்து தனது கணவரை வீட்டில் வைத்து கொன்றுள்ளார். கணவர் மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடியுள்ளார். போலீஸ் விசாரணையில் உண்மை வெளிவந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (மே 17) ராஜேஷ்வர் ரெட்டி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி