மெத்தனாலில் வெறும் தண்ணீர் கலந்து விற்பனை

51பார்த்தது
மெத்தனாலில் வெறும் தண்ணீர் கலந்து விற்பனை
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விற்பனை விவகாரத்தில் மெத்தனாலில் வெறும் தண்ணீரை கலந்து விற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கைதான மாதேஷிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆன்லைன் முலம் தொழிற்சாலைகளை கண்டுபிடித்து ஜி.எஸ்.டி. பில் இல்லாமல் தின்னர் என்ற பெயரில் மெத்தனாலை மாதேஷ் வாங்கியுள்ளார். மாதேஷிடம் மெத்தனாலை வாங்கிய சின்னதுரை, அதில் 1 லிட்டர் தண்ணீரை கலந்து விற்றுள்ளார். சின்னதுரையிடம் இருந்து மெத்தனாலை வாங்கி அதில் மேலும் 1 லிட்டர் தண்ணீரை கலந்து கோவிந்தராஜன் என்பவர் விற்பனை செய்துவந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி