பைக்கை அடித்து தூக்கிய பேருந்து - தாய் மகன் காயம்

85பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே சந்தனபாண்டியன் மற்றும் அவரது தாயார் பூங்கொடி ஆகியோர் நேற்று (மே 18) மாலை இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்களது பின்னால் அதிவேகமாக வந்த கல்லூரிப் பேருந்து ஒன்று பைக்கின் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. இதில், தடுமாறி கீழே விழுந்த இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய பேருந்தை பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி