தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதில், கோவை, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு இன்று (ஜூலை 4) கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுத்து வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. முன்னதாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.