நடிகர்கள் மம்மூட்டி, விநாயகன் ஆகிய இருவரும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை துல்கர் சல்மானை வைத்து ‘குரூப்’ (Kurup) படத்தை இயக்கிய ஜித்தின் கே. ஜோஸ் இயக்குகிறார். மம்மூட்டி தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் விநாயகனுக்கு வில்லனாக மம்மூட்டி நடிப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் நடைபெற்று வருகிறது.