மதுரையில் இருந்து ராமநாதபுரம் சென்ற அரசு பேருந்து பரமக்குடி வழியே சென்றுகொண்டிருந்தது. அப்போது மேலப்பசலை கிராமம் அருகே ஒரு ஜேசிபி இயந்திரம் வேலையை முடித்துவிட்டு சாலையை கடக்க முற்பட்டுள்ளது. அப்போது வேகமாக வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக ஜேசிபி இயந்திரத்தின் முன் பகுதியில் மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டு மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.