பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

85பார்த்தது
பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
ஆந்திர மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 9.10 மணிக்கு இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. விண்ணில் செலுத்தப்படும் மொத்தம் 469 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பூமியில் இருந்து சுமார் 650 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுப் பணிகளை முன்னெடுக்க உள்ளது. இதனிடையே பழவேற்காடு மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி