திரைப்பட பாணியில் பெண்ணை மீட்ட மீனவர்கள்

11332பார்த்தது
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த துடலா நாகலட்சுமி (40) என்ற பெண் குடும்பத் தகராறு காரணமாக ரயில் பாலத்தில் இருந்து கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மீனவர்கள் உதவியுடன் போலீசார் படகில் சென்றனர். பின்னர், அந்த பெண்ணை மீனவர் ஒருவர் பத்திரமாக மீட்டார். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி