மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிற்பகல்மூன்று மணி நிலவரப்படி 49.68% வாக்குகள் பதிவாகியுள்ளது. பீகாரில் உள்ள 8 மக்களவைத் தொகுதிகளில் 42.95 சதவீத வாக்குகளும், சண்டிகரில் 52.61 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இமாச்சலப் பிரதேசத்தில் நான்கு மக்களவைத் தொகுதிகளில் 58.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜார்க்கண்டில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளில் 60.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.