ரேஷனில் பாமாயில் விற்பனையை எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

65பார்த்தது
ரேஷனில் பாமாயில் விற்பனையை எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ரேஷன் கடைகளில் பாமாயில் விற்பனை செய்யப்படுவதை கைவிட்டு, உள்நாட்டு நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை விற்பனை செய்ய முன்வர வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் வெள்ளிக்கிழமை(ஜூன் 28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் ஜி.எஸ். தலைமை வகித்தார். தென்னை விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் செல்லதுரை உள்பட
அனைத்து விவசாயிகள் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும், ரேஷன் கடைகளில் பாமாயில் விற்பனையை நிறுத்திவிட்டு, தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவற்றை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்ய முன்வர வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்தி