கள்ளக்கு றிச்சி மாவட்டம் கருணா புரத்தில் விஷ சாராயம் குடித்து 50க்கும் மேற் பட்டவர்கள் பலியான சம்பவத்தை கண்டித்து பாஜவினர் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.
இந்நிலையில், ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் பாஜ தெற்கு மாவட்ட தலைவர் வேதா னந்தம் தலைமையில் கட் சியினர் திரண்டு, கள்ளக் குறிச்சி விஷ சாராயம் சம்பவத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து, போலீ சார் பாஜவினரை கைது செய்து வாகனங்களில் ஏற் றிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கிருந்த பாஜ மகளிர் அணியினர் சூரம்பட்டி நால்ரோட்டில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் 30 பெண்கள் உட்பட 200 பாஜவினரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டு பரபரப்பாக காணப்பட்டது.